التكاثر   سورة  : At-Takaathur


سورة Sura   التكاثر   At-Takaathur
الصفحة Page 600
(10) மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
(11) நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
القارعة Al-Qaari'a
(1) திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
(2) திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
(3) திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
(4) அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
(5) மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
(6) எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
(7) அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
(8) ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
(9) அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
(10) இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
(11) அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
التكاثر At-Takaathur
(1) செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
(2) நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
(3) அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
(4) பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
(5) அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
(6) நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
(7) பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
(8) பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
 


اتصل بنا | الملكية الفكرية DCMA | سياسة الخصوصية | Privacy Policy | قيوم المستخدم

آيــــات - القرآن الكريم


© 2022